2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவருக்கு அபராதம்

Niroshini   / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

திருக்கோவில் பிரதேசத்தில் மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 11 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் சாரதி அனுமதிப் பத்திரத்தை 06 மாதங்களுக்கு இரத்து செய்யுமாறும் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி இன்று (26) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

திருக்கோவில் பொலிஸாரால் குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபரை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் இன்று (26) ஆஜர்செய்தபோது 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளாதோடு, சாரதி அனுமதிப் பத்திரத்தை 06 மாதங்களுக்கு இரத்து செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், திருக்கோவில் பிரதேசத்தில் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் மேலும் கைது செய்யப்பட்டுள்ள நபர் ஒருவருக்கு ஏற்கெனவே இவருக்கெதிராக முன் குற்றங்கள் உள்ளபடியால் 28 ஆயிரம் அபராதம் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X