2025 மே 21, புதன்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு அபராதத்துடன் சாரதி அனுமதிப்பத்திரமும் இரத்து

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா
 
அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் வாகன அனுமதிப்பத்திரமில்லாமல் மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரொருவருக்கு 17 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், சாரதி அனுமதிப்பத்திரத்தை 06 மாதங்களுக்கு இரத்துச் செய்து அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி, நேற்று செவ்வாய்க்கிழமை (19) உத்தரவிட்டுள்ளார்.
 
அக்கரைப்பற்றுப் பொலிஸாரால் குறித்த நபர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
 
இவ் வழக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் நேற்று  (19) விசாரணைக்கு எடுத்துக்குக்கொள்ளப்பட்ட போது நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X