2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மதில் விழுந்ததில் சிறுவன் பலி

Suganthini Ratnam   / 2016 ஜூன் 19 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, பொத்துவில் ஹிதாயாபுரம் 20ஆம் பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை மதில் இடிந்து விழுந்ததில் அப்பகுதியைச் சேர்ந்த இஸ்ஸதீன் முகம்மது அனஸ் (வயது-14) என்ற சிறுவன் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டு வளவைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள மதிலின்  மேல் ஏறி நடந்துகொண்டிருந்த இந்தச் சிறுவன், தவறிக் கீழே விழுந்துள்ளான். இதனை அடுத்து, குறித்த மதில் இடிந்து இச்சிறுவனின் மீது விழுந்துள்ளதாக் பொலிஸார் கூறினர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X