2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

மருத்துவ முகாம்

Niroshini   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல். அப்துல் அஸீஸ்

மாற்றுத்திரனாளிகளுக்கான மருத்துவ முகாமும் அரசாங்க மாதாந்த கொடுப்பனவுகளுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று(09) கல்முனை கிரீன் பீல்ட் முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்றது.

கல்முனை திறந்த சாரணிய அமைப்பு மற்றும் கல்முனை மக்கள் மன்றம் ஆகியவற்றின் அனுசரணையுடன்  வலது குறைந்தோர் மறுமலர்ச்சி சங்கத்தினால் நடத்தப்பட்ட  இந்நிகழ்வில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாற்றுத்திரனாளிகள் கலந்துகொண்டு நன்மையடையலாயினர்.

கல்விக்கல்லூரி முன்னாள் விரிவுரையாளரும்  மாவட்ட சாரணிய அமைப்பின் முன்னாள் ஆணையாளருமான எம்.ஐ.எம்.முஸ்தபாவின் ஒருங்கிணைப்பில், அஸ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எ.எல்.எப்.ரஹ்மானினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த  மருத்துவ முகாமில் வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X