Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பாலமுனை ஹிறா நகர் மீள் குடியேற்றக் கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (6) அதிகாலை 3 மணியளவில் காட்டு யானை தாக்குதலினால் வீடு மற்றும் தென்னை மரங்கள் துவம்சம் செய்யப்பட்டள்ளன.
அண்மைக்காலமாக பாலமுனை ஹிறா நகர் மீள் குடியேற்றக் கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுகின்றது.
அக்கிராமத்தில் வாழ்கின்ற மக்கள் யானையின் தொல்லையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அச்சம் காரணமாக சொந்த இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து செல்லக் கூடிய சூழ்நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளதாக அக்கிராமத்தில் வசித்து வரும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு யானைகளின் அட்டகாசம் தொடருமானால் இக்கிராமத்தை விட்டு உறவினர்களின் வீடுகளுக்கச் சென்று தஞ்சமடைய வேண்டிய சூழ்நிலை உருவாகும் என தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago