2025 மே 19, திங்கட்கிழமை

விபத்து; கைதான சாரதி பிணையில் விடுவிப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 07 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, சவளக்கடைப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (05) மாலை மதுபோதையில் முச்சக்கரவண்டியைச் செலுத்தி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் காயம் அடைந்ததைத் தொடர்ந்து, கைதுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிச் சாரதியை  நேற்றுப் புதன்கிழமை பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவரை எதிர்வரும் 14ஆம் திகதி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் சமூகமளிக்குமாறு பணித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

முச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றது. இவ்விபத்தில் பெரிய நீலாவணையைச் சேர்ந்த திருமதி திலகேஸ்வரி ரூபன் (வயது 37) என்பவரே காயமடைந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X