2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இளைஞர் பலி

Suganthini Ratnam   / 2016 ஜூன் 28 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா, நடராஜன் ஹரன், பைஷல் இஸ்மாயில், ரீ.கே.றஹ்மத்துல்லா,எஸ்.ஜமால்டீன்

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் கொழும்பைச் சேர்ந்த முகம்மது றயிஸ் (வயது 18) என்பவர் பலியாகியுள்ளார்.

சைக்கிளில் சென்ற குறித்த இளைஞர் தடக்கிக் கீழே விழுந்தபோது, வீதியால் வந்த டிப்பர் ரக வாகனம் மோதியதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞர் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
டிப்பர் வாகனச் சாரதி கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X