2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விபத்தில் சிறுவன் படுகாயம்

Sudharshini   / 2015 நவம்பர் 14 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, பொத்துவில்-உல்லே பிரதான வீதியில் நேற்று (13)  மாலை இடம்பெற்ற விபத்தில்; படுகாயமடைந்த 15 வயது சிறுவனை, பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சிறுவன் துவிச்சக்கர வண்டியில் சென்றுக்கொண்டிருந்த போது,  பின்னால் வந்த கார் ஒன்று துவிச்சக்கர வண்டியின் மீது மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் இரண்டாம் பிரிவைச் சேர்ந்த முகம்மது பாஸில் முகம்மது நஸ்மி என்ற சிறுவனே அவ்விபத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இவ் விபத்து தொடர்பாக பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்;.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .