2025 ஜூன் 28, சனிக்கிழமை

விவசாய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 02 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை பிரதேச விவசாய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது விதைநெல் உற்பத்தி, கரடிக்குளம் விவசாயப் பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல், விவசாயக்காணிகள், குளங்கள், ஆறுகளை பாதுகாத்தல்,  விவசாய நிலங்களில் யானைகளின் பிரவேசத்தை தடுப்பதற்கு  நடவடிக்கை எடுப்பது ஆகியவை தொடர்பில் ஆராயப்பட்டன.

நீர்வளங்களை பாதுகாப்பது, சேதனைப்பசளை உற்பத்தியையும் பாவனையையும் ஊக்குவிக்கும் முகமாக அது தொடர்பில் விவசாயிகள், பண்ணையாளர்களுக்கான விழிப்புணர்வு வேலைத்திட்டத்தை மேற்கொள்வது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், தேசிய உணவு உற்பத்தி மாதம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட விவசாயப் உதவிப் பணிப்பாளர் எம்.எப்.எம்.ஸனீர், உதவி திட்டப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.அஸ்லம், கால்நடை வைத்திய அதிகாரி திருமதி ரீ.கோகுலதாஸ் மற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .