2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அட்டாளைச்சேனையில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் திட்டம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் 10 இலட்சம் ரூபாய் செலவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பிரதேச சபையின் செயலாளர் எம்.எஸ்.கலீலுர்றகுமான் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒலுவில் திமிட்டன் ஓடை வீதிப் புனரமைப்பு, அட்டாளைச்சேனை அரபா வித்தியாலய வீதிப் புனரமைப்பு, பாலமுனை கடற்கரைப்பூங்காவுக்கான அபிவிருத்தி வேலைகள், அட்டாளைச்சேனை கொள்கலனை புனரமைத்தல் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த அரசாங்கத்தில் உள்ளூராட்சிமன்றங்களை வலுவூட்டும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு உள்ளூராட்சிமன்றங்களுக்கும் மாதாந்தம் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .