Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 30 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் கடந்த 03 தினங்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக தாழ் பிரதேசங்களில் வெள்ள அபாயம் நிலவுகின்றது.
இதற்கிணங்க,பொத்துவில், திருக்கோவில், லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நட்பிட்டிமுனை, நாவிதன்வெளி மற்றும் மருதமுனை ஆகிய தாழ் பிரதேசங்களை அண்மித்துள்ள குடியிருப்புக்கள் வெள்ள நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் மழையினால் உள் வீதிகள் பல வெள்ள நீரில் மூழ்கியுள்ளதோடு, உள்ளூர் போக்குவரத்துக்களும் ஸ்தம்பிதநிலையை அடைந்துள்ளன.
இதேவேளை,தாம்போதிகளிலும் வாய்க்கால்களிலும் நீர் பெருக்கெடுத்துள்ளன. இதனால்,மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும்,மாலை வேளையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வதால் கடல் கொந்தளிப்பு அதிகரித்துள்ளது. இதனால் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
நன்னீர் மீன்பிடித் தொழிலும் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளதுடன் அன்றாட தொழிலாளர்களின் நாளாந்த தொழில் நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளன.
இதேவேளை,மீன்களின் விலை அதிகரித்துக் காணப்படுவதுடன் மரக்கறி வகைகளின் விலைகளும் என்றுமில்லாதவாறு அதிகரித்துக் காணப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மழைநீர் தேங்கியுள்ள வடிகால்களை துப்பரவு செய்து மழை நீர் வழிந்தோட முடியாதவாறு தேங்கி நிற்கும் இடங்களிலிருந்து நீரைவடிந்தோட செய்ய உள்ளூராட்சிமன்றங்களினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago