2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கௌரவிப்பு விழாவும் கல்வி எழுச்சி மாநாடும்

Niroshini   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

பாலமுனை அல்-அறபா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு விழாவும் கல்வி எழுச்சி மாநாடும் எதிர்வரும் சனிக்கிழமை (26) மாலை 4.00 மணிக்கு பாலமுனை கடற்கரை முன்றலில் நடைபெறவுள்ளது.

அல்-அறபா விளையாட்டு கழகத்தின் தலைவர் எஸ்.ஆப்தீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதம அதிதியாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எம்.எம்.எம். நஜீம், பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி எம்.ஐ.எம்.மௌஜீத்,கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிசாம் கௌரவ அதிதியாகவும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் மௌலவி ஏ.எல்.எம்.காசிம், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது,பாலமுனை பிரதேசத்திலிருந்து 2008ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரை பல்கலைக்கழகம் நுழைந்த அனைவரும் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .