2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'தென்கிழக்குப் பல்கலையின் பொறியியல்பீடம் அபிவிருத்தி செய்யப்படும்'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 10 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீடம் எதிர்காலத்தில் நவீனமுறையில் அபிவிருத்தி செய்யப்படுமென பல்கலைக்கழக கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீட மாணவர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக  பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்துக்கு திங்கட்கிழமை (09) மாலை விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர்,   பல்கலைக்கழக நிர்வாகிகள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடியபோதே, இதனைக் கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'மாணவர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு பல்கலைக்கழக கல்வி அமைச்சருடனும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினருடனும் கலந்துரையாடி தீர்வு  வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், பொறியியல்பீடத்துக்கு தேவையன நிரந்தர விரிவுரையாளர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.  

'எனவே, எதிர்காலத்தை கருத்திற்கொண்டு மாணவர்கள் கல்வியைத் தொடரவேண்டும். அப்போதே, நாம் எதிர்பார்த்துள்ள கல்வியாளர்களை நாட்டில் உருவாக்க முடியும்' எனவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் இராஜாங்க அமைச்சரிடம் மாணவர்கள் கையளித்தனர்.

இந்நிகழ்வில் அமைச்சின் மேலதிகச் செயலாளர் பி.ஜி.ஜெயசிங்க, மொறட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் கபில பெரேரா, பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் மற்றும் திணைக்கள தலைவர்களும், பொறியல் பீட மாணவர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .