Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2017 ஜனவரி 10 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
நிந்தவூர் பிரதேசத்தில் நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் காணப்பட்ட வெற்றுக் காணிகளின் உரிமையாளர்கள் 54 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், இது தொடர்பான அறிவித்தல் துண்டுப்பிரசுரங்களும் ஒட்டப்பட்டதாக சம்மாந்துறைப் பொலிஸ் நிலையச் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி எம்.எஸ்.அப்துல் தெரிவித்தார்.
மேற்படி பிரதேசத்தில் திங்கட்கிழமை (09) பொதுச் சுகாதார அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.
இதன்போதே, மேற்படி வெற்றுக் காணிகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேற்படி வெற்றுக் காணிகளை 14 நாட்களுக்குள் துப்புரவு செய்ய வேண்டும் என்பதுடன், தவறும் பட்சத்தில் இவர்களுக்கு எதிராகச் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
2 hours ago
2 hours ago