2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

10 புதிய நியமனங்கள்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

இலங்கை நிர்வாகச் சேவைக்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்ட 10 பேர், பொதுநிர்வாக அமைச்சினால் நியமனம் பெற்று கிழக்கு மாகாணத்திலுள்ள அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் நேற்று வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் வெற்றிடமாகக் காணப்பட்ட முக்கிய பதவிகளுக்கான நியமனங்களை  மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபயகுணவர்தன கடந்த செவ்வாய்கிழமை  வழங்கி வைத்தார்.

இதில் 4 தமிழர்களும் 3 முஸ்லிம்களும் 3 பெரும்பான்மையினத்தவர்களும்  நியமனங்களைப் பெற்றுள்ளனர்.

கிழக்கு மாகாண காணி நிர்வாகத் திணைக்களத்தில் காணி உதவி ஆணையாளராக ஜெயினுலாப்தின் பாஹிமாவும் திருகோணமலை நகரசபைச் செயலாளராக எம்.ஆர்.பாத்திமா றிப்ஹாவும் மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக எம்.ஆர்.சியாவுல்ஹக்கும் மாகாண பேரவைச் உதவிச் செயலாளராக யூ.சிவராசாவும் முதலமைச்சின் உதவிச் செயலாளராக எஸ்.சத்தியராகவனும் மாகாண பிரதிப் பிரதம செயலக உதவிச் செயலாளராக ஏ.சரனிய்யாவும் விவசாய அமைச்சின் உதவிச் செயலாளராக எஸ்.பாரத்;தீபனும் மாகாணக் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளராக வி.எம்.ஐ.எஸ்.எல்.பண்டாரவும் மாகாண உதவிப் பிரதம செயலாளராக ஏ.ஜி.எஸ்.சீ.தென்னக்கோனும் அம்பாறை நகரசபைச் செயலாளராக கே.எம்.கே.எஸ்.குலதுங்கவும் நியமனம் பெற்றுள்ளனர்;.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X