Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Kanagaraj / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா,ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில் நீர்க்காகம் கூட்டு இராணுவ நடவடிக்கையின் போது கைவிடப்பட்டிதுருந்த துப்பாக்கி ரவையொன்று வெடித்ததில் 9 வயதுடைய சிறுவன் ஒருவன் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று சனிக்கிழமை (26) காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஏறாவூர்- ஹிதாயத் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.எம் நிப்ரான் என்ற சிறுவனே காயமடைந்தவர்.
சமீபத்தில் ஏறாவூர் புன்னக்குடா கடற்கரையில்'தியகாவா' நீர்க்காகம் என்ற பெயரில் நடைபெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராணுவத்தினரின் கூட்டு பயிற்சி நடவடிக்கையின் பின்னர் அப்பிரதேசத்தில் வெற்று மற்றும் வெடிக்காத நிலையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை சிறுவர்கள் எடுத்துச்சென்றுள்ளனர்.
குறித்த சிறுவன், மரமுந்திரிகை விதைகளை வெதுப்புவதற்கான சட்டியில் துப்பாக்கி ரவைகளையும் சேர்த்து நெருப்பு வைத்தபோது ரவை வெடித்துச் சிதறியதில் அச்சிறுவனின் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுவன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
31 minute ago