2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கிறிட் உப மின் நிலையத்தின் திருத்த வேலைகள் காரணமாக 8 மணிநேர மின்வெட்டு

Kogilavani   / 2012 ஜூன் 21 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                     (ஏ.ஜே.எம்.ஹனீபா,எம்.சி.அன்சார்)
அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.30 வரைக்கும் மின்வெட்டு அமுலில் இருக்கும் என்பதை இலங்கை மின்சார சபையின் அம்பாரை பிரதேச மின் பொறியியலாளர் பாவனையாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அம்பாறை கிறிட் உப மின் நிலையத்தின் திருத்த வேலைகள் காரணமாக இம்மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கல்மடுவ, ஹிங்குராண, தமன, ஏராகம, அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில், பாணம, சியம்பலாண்டுவ, தொம்பககாவெல, அம்பாறை நகர், கெமுனுபுர, சுதுவல்ல, கொண்;டவட்டுவான், பறகாகல, ஹிமிதுராவ, கலஹிற்றியாக்கொட, நாமல்ஓயா, இங்கினியாகல, உகண, கொணாகொல்ல, பியங்கல, 69ஆம் சந்தி, தம்பிட்டிய, மகாஓயா, சேரங்கட, பதியத்தலாவ, நவகங்கொட, வளத்தாப்பிட்டி, மல்வத்தை, வீரகொட, மத்தியமுகாம், 11ஆம் கொலணி, 13ஆம் கொலணி, 5ஆம் கொலணி, 17ஆம் கொலணி, 21ஆம் கொலணி ஆகிய பிரதேசங்களிலே மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .