Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 13 , மு.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை, நகவம்புர பிரதேசத்தில் புதையல் தோண்டி கொண்டிருந்த 9 பேரை நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பூஜைப் பொருட்கள், மண்வெட்டி, போன்ற பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவத்தில் ஹிங்குராணை, அம்பாறை, உகண, ஹொறன, விலச்சி போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்களே; கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பாறை நகர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
24 Jun 2025