2025 ஜூன் 26, வியாழக்கிழமை

பாலகரச்சி குளத்தில் நீராடச் சென்ற 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 23 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

திருக்கோவில், தங்கவேலாயுதபுரம், பாலக்கரச்சி குளத்தில் நீராடச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த 12 வயது சிறுவனின் சடலம் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

விநாயகபுரம், பாலக்குடாவைச் சேர்ந்த தெய்வநாயகம் குடும்பத்தினர் தங்கவேலாயுதபுர பிரதேசத்தில் சேனைப்பயிர் செய்கைக்காக சென்று தங்கிய நிலையில் கடந்த  செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இரு சிறுவர்கள் அருகில் உள்ள பாலக்கரச்சி குளத்தில் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது பாலக்குடா,  பாலவிநாயகர் வீதியைச் சேர்ந்த தெய்வநாயகம் நிரோசன் 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயரிழந்தார். இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் நேற்று புதன்கிழமை காலை 10 மணிக்கு குளக்கரையை அடைந்த நிலையில் மீட்கப்பட்டு அம்பாறை போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டு பிரேத பரிசேதனையின் பின்னர் உறவினர்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • Rj moorthy Friday, 24 February 2012 02:41 AM

    சிறுவர்களை குளத்தில் தனிய குளத்தில குளிக்க விட்டது கவன குறைவாகும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .