2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மதுபோதையில் அமைதிக்கு பங்கம் விளைவித்தவருக்கு 2000 ரூபாய் அபராதம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 22 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

 

அம்பாறை, தம்பிலுவில் பிரதேசத்தில் மதுபோதையில் பொது இடத்தில் அமைதிக்கு பங்கம் விளைவித்த ஒருவருக்கு இரண்டாயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

தம்பிலுவில் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 15ஆம் திகதி மதுபோதையில் பொது இடத்தில் அமைதிக்கு பங்கம் விளைவித்த போது திருக்கோவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

மேற்படி நபரை நீதிமன்றில் ஆஜயர்படுத்திய போது  இரண்டாயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .