Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 19 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் நிலவிய யுத்த சூழ்நிலைகளால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த 69 பாடசாலைகளில் 45 பாடசாலைகள் மீளவும் திறக்கப்பட்டு மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.
மட்டக்களப்பு வலயத்தில் இரு பாடசாலைகளும், கல்குடா வலயத்தில் 17 பாடசாலைகளும், அம்பாறை வலயத்தில் ஒரு பாடசாலையும், மூதூர் வலயத்தில் 18 பாடசாலைகளும், கந்தளாய் வலயத்தில் ஒரு பாடசாலையும், திருகொணமலை வலயத்தில் 6 பாடசாலைகளும் திறக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீளத்திறக்கப்பட்ட இப்பாடசாலைகளில் மாணவர்களின் தேவைகளுக்கு தேவையான கற்றல் உபகரணங்களும் பாடசாலை கட்டிட வழங்களும் அரசசார்பற்ற நிறுவனங்கள், யுனிசெவ் நிறுவனம், கல்வி அமைச்சு என்பவற்றினால் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago