2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சம்புநகர் கிராமத்துக்கு 3 கோடி ரூபாய் செலவில் குடிநீர் இணைப்புத் திட்டம்

Kogilavani   / 2012 ஏப்ரல் 05 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ஹனீக் அஹமட்)


அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சம்புநகர் கிராமத்துக்கு 3 கோடி ரூபாய் செலவில் குடிநீர் இணைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக  அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் நசீர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பிலான கலந்துரையாடலும், சமய அனுஷ்டானமும் நேற்று புதன்கிழமை சம்புநகரில் இடம்பெற்றது.

அரச சார்பற்ற நிறுவனமொன்றின் நிதியுதவியுடன் அட்டாளைச்சேனை பிரதேச சபையினூடாக சம்புநகர் கிராமத்துக்கான குடிநீர் இணைப்பு வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் பிரமுகராகக் கலந்து கொண்டார்.
 
இந்த கிராமத்துக்கு இதுவரை குடிநீர் இணைப்பு வசதி வழங்கப்பட்டிருக்கவில்லை.

சம்புநகர் மிகவும் பழைமை வாய்ந்ததொரு கிராமமாகும். தற்போது அங்கு சுமார் 100 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவற்றில் 25 வீடுகளைக் கொண்ட அங்கவீனர்களுக்கான வீட்டுத் தொகுதியொன்று உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வில், ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் எஸ்.எல். அபூதாலிப், சம்புநகர் பள்ளிவாயல் தலைவர் ஹசன், மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0

  • annan Thursday, 05 April 2012 04:26 PM

    யாரையும் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கனும். தகுதியான ஒருவர் அட்டாளைச்சேனைக்கு கிடைக்க வில்லை என்பதனை நினைத்து கவலையாகவும் வேதனையாகவும் இருக்கும். அல்லாஹ் நீதான் (குடி) மக்களை பாதுகாக்கனும்.

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 05 April 2012 08:17 PM

    வாழ்த்துக்கள் தவிசாளரே

    Reply : 0       0

    janoover Friday, 06 April 2012 03:36 AM

    சரியாகச் சொன்னீர்கள் அன்னன். பிரதேச வாதம் பேசி யாரையோ மேலே வைத்துள்ளார். ஊர் மானம் காக்க மாகண அமைச்சர் இருக்கிறார். இல்லையேல் சொல்லி வேலை இல்லை.

    Reply : 0       0

    janoover Friday, 06 April 2012 03:37 AM

    குடி நீர் திட்டம் வழங்க தவிசாளர் எதுக்கு? அதனை எங்கள் அமைச்சர் சரியாக செய்து விட்டாரே? எல்லாத்துக்கும் பணமும் ஒதுக்கி முடிந்து விட்டது. இனிமேல் அது சரியாக நடைபெறும்.

    Reply : 0       0

    ரசீன் Friday, 06 April 2012 03:38 AM

    ஊருக்கு நல்லது செய்யுங்கள், உங்களுக்கே குழம்பாமல்.

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 06 April 2012 02:48 PM

    இங்கு இப்படியான மின்சாரம் நீர் வினியோகம் எல்லாம் சம்பு நகருக்கு கொண்டு வர நிறையவே கஷ்டப்பட்டவர்கள் எங்கள் தவிசாளர் நசீரும் அவருடன் உறுப்பினர் முனாசும் என்பதனை மறக்க வேண்டாம்.
    இது எங்க இருந்து வந்த பணம் யார் மூலமாக வருது என்பது எல்லாம் எங்களுக்கும் தெரியும் சும்மா பம்மாத்து காட்ட வேண்டாம். ஊருக்கு கிடைத்திருப்பது சரியான ஒருவர்தான். அன்னன் நீர் யாருக்கு என்ன சொல்லியிருக்கீறீர் என்பதனை தெளிவாகச்சொல்லும்.

    Reply : 0       0

    shakiras Sunday, 13 May 2012 07:22 AM

    thanks naseer uncle..............ivar saithal anna, avar saithal anna, emathu kiramathu makkalukuthan.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .