2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'புகைத்தலை கைவிடுவதால் 4,000 நச்சு பதார்த்தங்களிலிருந்து பாதுகாத்து கொள்ளலாம்'

Super User   / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

ஒருவர் புகைத்தலினைக் கைவிடுவாராயின்  உடலுக்கு தீங்கு விளைவிக்கும் 4,000 நச்சு பதார்த்தங்களிலிருந்து பாதுகாக்கப்படுகின்றார் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெவ்வை தெரிவித்தார்.

கல்முனைப் பிராந்திய  சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் உணவு, மருந்து கட்டுப்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் தனியார் மருந்தக விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கும், ஊடகவியலாளர் சந்திப்பும் நேற்று கல்முனைப் பிராந்திய  சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் கோட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சிகரட்  புகைத்தல் மூலம் 4,000 நச்சு பதார்த்தங்கள்  கண்டுபிடிக்கப்பட்டள்ளதுடன், அதில் 40 நச்சு பதார்த்தங்கள் புற்று நோயினை உருவாக்க கூடியவை. உலகத்தில் வருடமொன்றில் 6 தொடக்கம் 7 மில்லியன் பேர் புகைப்பதன் மூலம் மரணிக்கின்றனர். ஒருவர் புகைக்கும் சிகரட் அவரது கழுத்தை நெறிக்கும் ஒன்றாகும். அவர் பல நோய்களுக்குள்ளாவதுடன் குறைகின்றது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .