2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கஞ்சா வைத்திருந்த நபருக்கு ரூ.10,000 தண்டம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை, மத்தியமுகாம் பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த ஒருவருக்கு 10,000 ரூபா தண்டம் விதித்து கல்முனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.றிஸ்வி நேற்று தீர்ப்பளித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை மத்தியமுகாம் பிரதேசத்தில் 12ஆம் கொலனியில் உள்ள வீடு ஒன்றை சோதனையிட்டதாகவும் இதன்போது மறைத்துவைக்கப்பட்ட நிலையில் 15 கிராம் கஞ்சாவை கைப்பற்றியதுடன்,  சந்தேக நபர்  ஒருவரையும் கைதுசெய்ததாகவும் மத்திய முகாம் பிரதேசப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் நேற்று செவ்வாய்க்கிழமை கல்முனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கல்முனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தண்டம் விதித்து தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .