Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 21 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்காக குவைத் அரசாங்கம் 10.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இரண்டாம் கட்டமாக வழங்கியுள்ளதாக இலங்கை வந்துள்ள குவைத் நிதிய தூதுக்குழுவினர் தெரிவித்தனர்.
குறித்த நிதியுதவி குவைத் அரசாங்கத்தின் அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளது என அந்நிதியத்தின் பிரதி பணிப்பாளர் ஹிசாம் அல் வாஹ்யான் இன்று செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டார்.
இந்நிதியுதவியின் ஊடாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தரமான கற்கை நெறிகளை உருவாக்க முடியும். அத்துடன் பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் தென் கிழக்கு பல்கலைக்கழத்தில் தரமான கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படும் என குவைத் நிதியம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் குவைத் நிதியம் ஊடாக வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதற்கட்ட அபிவிருத்திக்காக 800 மில்லியன் ரூபாவை குவைத் நிதியம் முன்னர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தென் கிழக்கு பல்கலைக்கழக நிதியுதவி தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் பி.வி.ஜயசுந்தர மற்றும் குவைத் நிதிய பிரதி பணிப்பாளர் ஹிசாம் அல் வாஹ்யான் ஆகியோர் இலங்கைக்கான குவைத் தூதுவர் யாகூப் யூசுப் அலாதீக் முன்னிலையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இதேவேளை, நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 25 பாலங்களை புனர்நிர்மாணம் செய்வதற்காக நிதியுதவி வழங்கவுள்ளதாகவும் குவைத் நிதிய பிரதி பணிப்பாளர் தெரிவித்தார்.
1975ஆம் ஆண்டு தொடக்கம் கல்வி மற்றும் அபிவிருத்தி திட்டங்களை இலங்கையில் மேற்கொள்வதற்காக சுமார் 170 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை குவைத் அரசாங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. படங்கள்: நிசால் பதுகே
jeffry ahmed Wednesday, 21 December 2011 08:53 PM
இஸ்லாமிய நாடுகள் உதவி செய்தாலும் இன்னும் இலங்கையில் துவேசம் ஓயவில்லை. உதவி செய்யும் இஸ்லாமிய நாடுகள்
துவேசம் இல்லாத நாடாக இலங்கையை மாற்ற வேண்டும் என்று ேட்டுக்கொள்கிறேன்.
Reply : 0 0
Hunais Wednesday, 21 December 2011 09:12 PM
குவைத் உதவிக்கான முக்கிய நபர் முன்னார் அமைச்சர் ஏ.ஆர்.எம்.மன்சூரே ஆவார். அவர் குவைத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக இருந்த காலத்திலேயே இந்த நிதியுதவியிற்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது.
Reply : 0 0
easternbrother Thursday, 22 December 2011 02:19 AM
குவைத் தரும் பணம் எல்லாம் சரியாக பயப்படுத்தப்பட்டால் சரி..
Reply : 0 0
safa Thursday, 22 December 2011 04:14 PM
இந்த உதவி நல்ல திறமையுள்ள, மேற்படிப்பை தொடர முடியாத ஏழைகளை சென்றடைய வேண்டியவை..... செய்வார்களா? எமது.......................????
Reply : 0 0
pasha Thursday, 22 December 2011 09:35 PM
இங்கு தொடங்கப்படும் என்ற மருத்துவ மற்றும் பொறியியல் பீடங்களுக்கு என்னவாயிற்று?
Reply : 0 0
pattathari Friday, 23 December 2011 12:42 AM
சாப்பிட்டிட்டு ஏப்பம் விட்டிடாதீங்க.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
25 minute ago
2 hours ago