Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Suganthini Ratnam / 2012 ஜனவரி 04 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
2011ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியிலிருந்து 135 மாணவர்கள் சகல துறைகளிலுமிருந்து பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் கணிதப்பிரிவில் எம்.எச்.எம்.ஸஸ்னி, எம்.எச்.எம்.முர்ஸித், உயிரியல் பிரிவில் எம்.ஜே.சாமித் ஸீத், கலைப்பிரிவில் கே.எல்.றியாஸ் அஹமட், எம்.ஏ.எம்.முஹாஜிர் ஆகியோர் மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தி பெற்றுள்ளனர்.
பொறியியல்த் துறையில் 13 மாணவர்களும் மருத்துவத் துறையில் 3 மாணவர்களும் விவசாயத் துறையில் 5 மாணவர்களும் உயிரியல் விஞ்ஞானத் துறையில் 5 மாணவர்களும் பௌதீக விஞ்ஞானத் துறையில் 25 மாணவர்களும் வர்த்தக முகாமைத்துவத் துறையில் 8 மாணவர்களும் கலைத்துறையில் 7 மாணவர்களும் எஞ்சிய மாணவர்கள் ஏனைய துறைகளுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் கணிதத் துறையில் எம்.எச்.எம்.ஸஸ்னி முதலாம் இடத்தைப் பெற்றும் தேசிய ரீதியில் 169ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
கடந்த வருடம் இக்கல்லூரியிலிருந்து பொறியியல்த் துறைக்கு அம்பாறை மாவட்டத்தில் முதனிலை உட்பட 17 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
frf, saudi arabia Wednesday, 04 January 2012 03:24 PM
உங்கள் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் மேலும் முன்னேற இறைவன் உங்களுக்கு அருள் புரிவாவானாக...
Reply : 0 0
pasha Wednesday, 04 January 2012 05:39 PM
எனது கல்விக்கு உரமூட்டிய கல்முனை சாஹிராவுக்கு எனது வாழ்த்துக்கள்.
Reply : 0 0
ummpa Wednesday, 04 January 2012 08:09 PM
வாழ்த்துக்கள்.
இப்பாடசாலை உங்களுக்கு உணவூட்டியது. அது ஆசிரியர்களின் கடமை என்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள். இருந்தாலும் ஏன் மற்ற பாடசாலைகளால் முடியவில்லை . அதனால் தான் பல நாடுகளில் பெருமையுடன் வாழும் பழைய மாணவர்களே கொஞ்சம் உணவு ஊட்டிய பாடசாலைக்கு உதவிக்கரம் நீட்டுங்கள் . பல மாணவர்கள் தத்தளித்துக்கொண்டு இருக்கிறார்கள். கட்டிடங்கள் , நவீன காலத்து கற்கை உபகரணங்கள் இல்லாமல். சற்று சிந்திப்போம் உதவிக்கரம் நீட்ட எனது அன்பான வேண்டுதல்.
Reply : 0 0
Doc - KSA Wednesday, 04 January 2012 09:47 PM
Excellent, Congrates.
Reply : 0 0
AWaakirHussain Thursday, 05 January 2012 06:50 PM
மனமார்ந்த பாராட்டுக்கள் ............135 மாணவர்களில் எத்தனை வெளி மாவட்ட மாணவர்கள் உண்டு என்பது கவனிக்கப்பட வேண்டும். நமது மாவட்டத்தின் பிரதிநித்துவம் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டு வருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
Reply : 0 0
KILAKKIN OOR KURUVI Sunday, 08 January 2012 01:01 PM
இப்பிள்ளைகள் இந்த நிலைக்கு வருவதத்கு தாய், தகப்பன் எவ்வளவோ கஷ்டப்பட்டு காசு செலவு பண்ணி கண் விழித்து, டியுசனுக்கு அனுப்பி படிப்பிதிருப்பார்கள் என்பதையும் மறக்ககூடாது . ஆசிரியர்கள் பணம் எதுவும் வாங்காமல் பாடசாலைகளில் டியுசன் கொடுத்து மாணவர்களை மேலதிகமாக கல்வி புகட்டிருப்பார்களின் அப்படிப்பட்ட ஆசிரியர்கள்தான் பாராட்டப்பட்ட வேண்டியவர்கள். உண்மையில் திறமை காட்டிய மாணவர்களின் தாய், தகப்பன்மார்களே பாராட்டப்பட்ட வேண்டியவர்கள் . அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.........
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago