2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கஞ்சா போதை பொருளை வைத்திருந்தவர்களுக்கு 18 ஆயிரம் ரூபா அபராதம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 22 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

 

திருக்கோவில் பிரதேசத்தில் கஞ்சா போதைப் பொருள் வைத்திருந்த இருவருக்க 18 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் இன்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த இருவர் கூலிவேலைக்காக வந்து திருக்கோவில் பிரதேசத்தில் தங்கியிருந்த நிலையில் 2600 மில்லிக்கிராம், 1400 மில்லிக்கிராம் கஞ்சா போதைப் பொருளை வைத்திருந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி திருக்கோவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி நபர்களை பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இவர்களை இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதிபதி  தலா 9 ஆயிரம் ரூபா வீதம் 18 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .