Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 28 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
'ஒரு கிராமத்துக்கு ஒரு வேலை' என்னும் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 22 கிராமங்களுக்கு 22 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தலைமையில் திருக்கோவில் பிரதேசத்துக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டம் திருக்கோவில் பிரதேச செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போதே, மேற்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இவ் வேலைத்திட்டத்துக்காக நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தனக்கான நிதியிலிருந்து 10 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்தார்.
அத்துடன், 'கமநெகும' திட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் திருக்கோவில் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டு இன்னமும் நிறைவடையாமல் உள்ள வேலைகளை இனங்கண்டு அவற்றை உடனடியாக நிறைவு செய்வதற்கும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.செல்வராசா, திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரட்ணம், உதவித்திட்டப் பணிப்பாளர் ரி.நவநீதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago