2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தந்தை செல்வாவின் நினைவுப் பேருரை 26இல்

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 15 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான அமரர்  தந்தை செல்வாவின் 35ஆவது சிரார்த்ததின நினைவுப் பேருரை  எதிர்வரும் 26ஆம் திகதி  ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் கே.இரத்தினவேல் தெரிவித்தார்.

தந்தை செல்வா அமரத்துவமடைந்து  35ஆவது சிரார்த்த தினத்தையிட்டு தமிழரசுக் கட்சியின்  மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட
கட்சிப் பிரமுகர்களின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் நினைவுப் பேருரையை நடத்துவதற்கான கலந்துரையாடல் ஆலையடிவேம்பு பொதுநூலக
கேட்போர்கூடத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றதாகவும் இதில்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான  அரியநேத்திரன், பொன். செல்வராசா, அம்பாறை மாவட்ட பிரதேசசபை தவிசாளர்கள் மற்றும் சபைகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

இவ் நினைவுப் பேருரையைத் திறம்பட செய்வதற்கான ஏற்பாட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும்  அதன் தலைவராக ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளர் கே.இரத்தினவேலும் ஏனைய பிரதேசசபை தவிசாளர்கள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசசபை
உறுப்பினர்களைக் கொண்ட விழாக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆலையடிவேம்பு பிரதேசசபை தவிசாளரும்
ஏற்பாட்டுக்குழுவின் தலைவருமான கே.இரத்தினவேல் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .