2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்முனை மேயரினால் 3 அபிவிருத்தி வேலைத்திட்டள் ஆரம்பித்துவைப்பு

Super User   / 2012 ஜூலை 11 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் புறநெகும - வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள பிரதேசங்களுக்கு இடையிலான கிராமிய சிறுநகர அபிவிருத்தி முனைப்பின் கிழக்கின் உதயம் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மூன்று வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் அண்மையில் ஆரம்பித்துவைத்தார்.

கல்முனை பள்ளிவாசல் வீதியில் 5,250,886 ரூபா பெறுமதியான வடிகான் அமைப்பதற்கான வேலைத்திட்டம், பாண்டிருப்பு பிள்ளையார் கோவில் வீதியினை 7,505,790 ரூபா செலவில் கெங்றீட் வீதி அமைப்பதற்கான வேலைத்திட்டம் மற்றும் சேனைக்குடியிருப்பு, துறவந்தியமேட்டு வீதியினை 5,368,340.00  ரூபா செலவில் கெங்றீட் வீதி அமைப்பதற்கான வேலைத்திட்டம் என்பனவே ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர பொறியியலாளர் என பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, கல்முனை மேயர்  சிராஸ் மீராசாஹிபினால் ஒரு தொகுதி பிலாஸ்டிக் கதிரைள் சாய்ந்தமருது ஸம்சுல் பலாஹ் சமூக சேவை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன.
 
குறித்த நிறுவனத்தின் அலுவலக உபயோகத்திற்கு பிளாஸ்டிக் கதிரைகள் தேவைப்படுவதாக கல்முனை மேயரும் மீராசாஹிப் நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபருமான சிராஸ் மீராசாஹிபிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கினங்க மேற்படி நம்பிக்கை நிதியத்தின் நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட கதிரைகளே அன்பளிப்பு செய்யப்பட்டன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .