Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 07 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை தீகவாவி பிரதேசத்தில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த மூன்று கடற்படைவீரர்கள் உட்பட 9 பேரை தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அக்கரைப்பற்று நீதவான் ரி.சரவணராஜா நேற்று திங்கட்கிழமை அனுமதித்தார்.
அம்பாறை விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மேற்படி நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய மண்வெட்டி, அலவாங்கு, கத்தி. போன்ற உபரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்வர்கள் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களில் மூன்று கடற்படை வீரர்கள் அடங்குவர் எனவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை நேற்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் சரவணராஜா முன்னிலையில் ஆஜயர்படுத்திய போது, 9 பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
2 hours ago
4 hours ago