2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

30 மில்லியன் ரூபா செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட வீதிகள் திறப்பு

Super User   / 2012 ஏப்ரல் 08 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா,எம்.சீ.அன்சார்)


ஜைக்கா திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின்  மூலம் 30 மில்லியன் ரூபா செலவில் சம்மாந்துறையில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட மூன்று கிளை வீதிகள் உட்பட ஆறு கொங்கிரீட் வீதிகள் மக்களின் பாவனைக்காக நேற்று சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உளளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஇ கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் மற்றும் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

68 மில்லியன் செலவில் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ள அலிவன்னயார் வீதிக்கான அடிக்கல் நடும் வைபவமும் இடம்பெற்றது.

இதேவேளை, சமுர்த்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவிலுள்ள வருமானம் குறைந்த சமுர்த்தி குடும்பங்களில் இருந்து க.பொ.த சாதாரன தரம் சித்தியடைந்த மாணவர்களுக்கான 'சிப்தொர' புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும்  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, 20 மாணவர்களுக்கு 'சிப்தொர' புலமைப்பரிசில் சான்றிதழ் மற்றும் காசோலைகள் வழங்கப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .