2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

ஐஸ்கீறிம் உட்கொண்ட 30 பேர் திடீர் சுகவீனம்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 01 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஐஸ்கிறீம் உட்கொண்ட சுமார் 30 பேர் திடீரென சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வயிற்றோட்டம், வாந்திபேதி, காய்ச்சல்  ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களில் 22 சிறுவர்கள் அடங்குவதாகவும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எம்.தாசீம் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை வைத்தியசாலை மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை இவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வானில் வந்த ஐஸ்கிறீமை இவர்கள் வாங்கி உட்கொண்டதாகவும் இதன் பின்னர் இவர்கள் திடீரென்று சுகவீனடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து ஐஸ்கிறீம் உற்பத்திச் தொழிற்சாலைக்கு விரைந்த அட்டாளைச்சேனை சுகாதார அதிகாரிகள் அத்தொழிற்சாலைக்கு சீல் வைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • Kanmany Thursday, 01 September 2011 09:22 PM

    சுகாதார அமைச்சின் பின்நேட்பாடான இந்நடவடிக்கைக்கு நன்றிகள். தரம் குறைந்த உணவுகளை தயாரித்து விநியோகிக்கும் எத்தனையோ நிறுவனங்கள் இன்னும் தங்களது உற்பத்திகளை சந்தைப்படுத்திக்கொண்டிருக்கின்றன. தொடர்ந்தும் மக்கள் அவற்றை உண்டு அவதிப்படுவதற்கு முன்னர் இதன் பின்னராவது தகுந்த நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.

    Reply : 0       0

    siraj Thursday, 01 September 2011 10:19 PM

    இனிமேல் இப்படி நினைத்த மாதரி உற்பத்தி செய்து வினியோகிக்கும் உணவுக வகைகளை இலஞ்சம் வாங்கிவிட்டு விற்க அனுமதி கொடுக்காமல் சரியான முறையில் பரிசோதித்து மக்களின் நலனில் பங்களிப்பாற்றவும்.

    Reply : 0       0

    Riyas Friday, 02 September 2011 06:29 PM

    சினிமாவில் வரும் போலீஸ் மாதிரி நமது சுகாதார அதிகாரிகள். இப்படி ஒரு குற்ற செயல் நடைபெறும் போது குறிப்பிட்ட பகுதிக்கு பொறுப்பான அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதிகாரிகள் தூங்கும் போது இப்படியான செயல்கள் இடம்பெறத்தான் செய்யும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 11

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8