2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஐஸ்கிறீம் உட்கொண்டபின் மயக்கமடைந்த 31 சிறார்கள் வைத்தியசாலையில்

Super User   / 2011 ஒக்டோபர் 26 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஜஸ்கிறீம் உண்டதனால் மயக்கமடைந்த நிலையில் 31 சிறார்கள்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவின் கீழ் உள்ள கண்ணகிபுரம், நாவற்காடு, ஆலையடிவேம்பு போன்ற பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2 மணியளவில் வீதிவழியாக மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஜஸ்கிரீம் விற்பனையில் ஈடுபட்டவரிடம் பொற்றோர்கள் ஜஸ்கிறீம்களை வாங்கி தமது சிறுகுழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர்.


இந்த ஜஸ்கிறீம்களை உண்ட சிறுவர்கள் சிறிது நேரத்தின் பின்னர் மயக்க மடைந்துள்ளதாகவும் இதனையடுத்து மயக்கமடைந்த சிறுவர்கள் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலை மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பெற்றோர்களால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தாம் விசாரணை மேற்கொண்டுவருவதுடன் இவ் ஜஸ்கிறீம் வியாபாரியை தேடிவருவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்
 


You May Also Like

  Comments - 0

  • meenavan Thursday, 27 October 2011 02:37 PM

    ஐஸ் கிரீம் தரநிர்ணயம் செய்யப்படாமையின் விளைவு? வியாபாரியை கைது செய்து,உற்பத்தி செய்தவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தவும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .