2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தந்தையை இழந்த 325 பிள்ளைகளுக்கான பராமரிப்பு நிதிக் கொடுப்பனவு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 05 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்,ஏ.ஜே.எம்.ஹனீபா)

அம்பாறை மாவட்டத்தில் தந்தையை இழந்த 325 முஸ்லிம் பிள்ளைகளுக்கான பராமரிப்பு நிதிக் கொடுப்பனவு மற்றும் நோன்புப் பெருநாள் உடைகள் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை தாறூல் ஈமான் மர்கஸில் இடம்பெற்றது.

ஜமாஅத் அன்சாரிஸ் ஸுன்னத்தில் முகம்மதிய்யாவின் ஏற்பாட்டில் அல்-உஸ்வா பெண்கள் அரபிக் கலலூரியின் அதிபர் தேசகீர்த்தி மௌலவி ஐ.எல்.எம்.முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஜமாஅத் அன்சாரிஸ் ஸுன்னத்தில் முகம்மதிய்யாவின் பாராமரிப்பு பிரிவின் பொறுப்பாளர் எஸ்.செய்னுதீன்பரீட் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உடைகள் மற்றும் பராமரிப்பு நிதிக் கொடுப்பனவு என்பனவற்றினை வழங்கி வைத்தார்.

இதில் பெற்றோர்கள், உலமாக்கள், ஜமாஅத் அன்சாரிஸ் ஸுன்னத்தில் முகம்மதிய்யாவின் அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .