Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 ஓகஸ்ட் 22 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுபவர்களை தெரிவுசெய்யும் கூட்டம் இன்று காலை ஒலுவில் துறைமுக விடுதியில் இடம்பெற்றது.
துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் றோஹித அபேகுணவர்தன தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதியமைச்சல் ஹிஸ்புல்லா, மாகாண விவசாய அமைச்சர் நவரட்ணராஜா, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பியசேன, சரத் விஜேசேகர, ஸ்ரீயானி விஜயவிக்ரம, மாகாணசபை உறுப்பினர் புஸ்பராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கல்முனை மாநாகரசபை தேர்தலில் 19 முஸ்லிம்களும் 6 தமிழர்களும் போட்டியிடவுள்ளனர். அரசுக்கு ஆதரவளிக்கும் தமிழ் பேசும் கட்சிகள் என்ற ரீதியிலேயே இந்த வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன ஆகியோரின் ஆதரவாளர்கள் 6பேருமே தமிழர்கள் தரப்பில் போட்டியிடவுள்ளனர்.
கல்முனை மாநாகர சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் வேட்புமனுத் தாக்கல் நாளை இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
48 minute ago
51 minute ago
53 minute ago