Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 30 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை, வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மர்ம மனிதர்கள் கலவரத்தின்போது பொலிஸாரை தாக்கியமை மற்றும் அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் 9 பேர் நேற்று திங்கட்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவின் கீழுள்ள வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் மர்ம மனிதர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொதுமக்களால் பிடித்துவைக்கப்பட்ட மூவரையும் விடுவிப்பதற்காக சம்மாந்துறை பொலிஸார் சென்றிருந்தபோது பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதன்போது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
கைதுசெய்யப்பட்ட 9 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்தறை பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
1 hours ago