2025 ஜூன் 26, வியாழக்கிழமை

12 வயது மாணவன் வீதி விபத்தில் பலி; பதற்றநிலையை பொலிஸார் படையினர் தணித்தனர்

Super User   / 2012 மார்ச் 21 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

திருக்கோவில் பிரதேசத்தில் மண்அகழ்வு வாகனம் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 12 வயது  பாடசாலை மாணவன் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்தார்.

இன்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தையடுத்து அப்பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றநிலையை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நிலமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.பி.சமிந்த ஜெயசூரிய தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்றுக்கு பிரதான வீதியில் இன்று மாலை 5 மணிக்கு சென்றுகொண்டிருந்த அவ் வாகனம் திருக்கோவில் பிரதேச சபைக்கு முன்னால் திடீரென வீதியை விட்டுவிலகி, தனியார் வகுப்பிற்கு
சென்று நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்களுடன் மோதியது.


இவ் வீதி விபத்து சம்பவத்தில் தம்பிலுவில் இரண்டாம் பிரிவு தம்பிமுத்து வீதியைச் சேர்ந்தவரும் தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் தரம் 7ஆம் ஆண்டில் கல்விகற்று வரும் மதனராஜா இலக்சன் 12 வயது மாணவனே உயிரிழந்தார். இதணையடுத்து வாகன சாரதி தப்பி ஓடி பொலிஸாரிடம் சரணடைந்தார்.

இதணையடுத்து பிரதேச மக்கள் ஆத்திரமடைந்து அவ்வானத்தை சேதப்படுத்துமுற்பட்டதுடன் கல்வீச்சுக்களையும் நடத்தினர். இதனால் பிரதேசத்தில் பதற்றம் ஏற்பட்டதையடுத்து இராணுவத்தினரை வரவழைக்கப்பட்டு; நிலமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இச்சம்பவத்தில் வான சாரதி கைது செய்யப்பட்டதுடன் உயிரிழந்த மாணவனின் சடலம் திருக்கோவில் மாவட்ட வைத்திய சாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .