2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

13 உள்ளக வீதிகளை கொங்றீட் வீதிகளாக அமைக்க நடவடிக்கை

Kogilavani   / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பகுதியிலுள்ள 13 உள்ளக வீதிகளை கொங்றீட் வீதிகளாக அமைக்கும் வேலைத் திட்டம் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேனவினால் நேற்று சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப் பிராந்திய நிறைவேற்றுப் பொறியியலாளர் கே.எல்.எம். இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற மேற்படி வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கலந்துகொண்டார்.

இவ்வீதி நிர்மாணிப்பிற்காக 13 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

நாடாளுமன்ற உருப்பினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டி கொண்டதற்கு அமைவாக   ஜனாதிபதியின் கீழுள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சிலிருந்து மேற்படி வீதி நிர்மாண வேலைகளுக்கான நிதி ஒதுக்கப்பட்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன், கல்முனை முஸ்லிம் பிரிவு பிரதேச செயலாளர் எம்.எம். நௌபல், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு பிராந்திய காரியாலய பிரதம பொறியியலாளர் அமீனுல் அன்சார் பாரி, திருக்கோவில் பிரதேச செயலாளர் வி. அழகரட்ணம், ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் ஜே. ஜெகதீஸன், அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜெ.எம். இர்ஸாத் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

                                                                                                                                                                                                                       


You May Also Like

  Comments - 0

  • UMMPA Monday, 24 October 2011 06:16 AM

    இதுதான் நமக்கு தேவை . நமது பக்கத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கே ? இப்படியான உறுப்பினர்களின் நெடுங்கால சேவை நமக்குத்தேவை வாழ்த்துக்கள் !

    Reply : 0       0

    maazeen Monday, 24 October 2011 06:33 PM

    நல்ல விடயம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .