2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

உள்ளூராட்சிமன்றங்களின் வருமானத்தை மேம்படுத்துவதற்கான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எல்.தேவ்.)

உள்ளுராட்சி மன்றங்களின் வருமானத்தை மேம்படுத்தும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல்கள் மற்றும் ஏனைய சட்டவாக்க ஒழுங்குமுறையை இனங்காணல் பற்றிய இரண்டு நாள் செயலமர்வு இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவனத்தினரால் மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.

வளவாளர்களாக உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் ஹென்றி ஆராய்ச்சி, முன்னைய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் விமலரத்ன, பிரதி நகர செயலாளர், காமினி குணசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற்ற இந்தச் செயலமர்வின் முதல் நாள் நிகழ்வில், இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் பணிப்பாளர் ஐ.ஏ.ஹமீட் வரவேற்புரையை நிகழ்த்தினார். விசேட உரையிளை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திருமதி சத்தியானந்தி நிகழ்த்தினார்.

இந்தச் செயலமர்விற்கான ஒழுங்குகளை மட்டக்களப்பு நல்லாளுகை வளநிலையம் மேற்கொண்டிருந்தது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7