2025 ஜூன் 21, சனிக்கிழமை

நல்லிணக்க ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்ட அமர்வுகள் ஒத்திவைப்பு

Super User   / 2010 நவம்பர் 30 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறவிருந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.பி.அத்துகொட தமிழ்மிரர் இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.

இதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டத்திற்கான அமர்வு திட்டமிட்டபடி டிசம்பர் 03ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரை இடம்பெறும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் ஏற்கனவே யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .