Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2010 டிசெம்பர் 03 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.ஜெஸ்மின்)
அம்பாறை மாவட்டத்தின் மகாஓயா பிரதேசத்திலுள்ள சுடுநீர் கிணறுகளையும் அதனை சூழவுள்ள பகுதிகளையும் புனரமைக்குமாறு சம்மபந்தப்பட்ட அதிகாரிகளை பொதுமக்களும் பிரதேச அமைப்புகளும் கேட்டுள்ளனர்.
மகாஓயா பிரதேசத்தில் அமைந்துள்ள 7 சுடுநீர் கிணறுகளையும் அதனை அண்மித்துள்ள பகுதிகளையும் கடந்த 1976 ஆம் ஆண்டு அம்பாறை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த செனரத் சோமரெட்ன புனரமைப்பு செய்ததுடன், அதனை சுற்றி மதில்களையும் அமைத்துக்கொடுத்தார்.
நாளடைவில் இக்கிணறுகள் முறையாக பராமறிக்கப்படாததுடன், அதனைச் சுற்றியுள்ள மதில்களும் சிதைவடைந்து காணப்படுகின்றன.
இச்சுடுநீரில் குளிப்பதனால் தோல் நோய்கள் குணமடையும் எனற் நம்பிக்கையில் இக்கிணற்றை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
எனவே இவற்றை புனரமைப்பு செய்துத்தருவதுடன் ஒரே நேரத்தில் பலர் நின்று குளிப்பதற்கான வசதிகளையும் இக்கிணற்றருகில் ஏற்படுத்ததித் தருமாறு பிரதேச அமைப்புகளும் பொதுமக்களும் சம்மபந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago