2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

தோணியில் பயணித்தபோது காணாமல் போன இருவர் சடலங்களாக மீட்பு

Super User   / 2011 பெப்ரவரி 06 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

கடந்த வெள்ளிக்கிழமை கல்முனை கிட்டங்கி ஆற்றில் தோணியில் பயணித்த வேளை, அத்தோணி கவிழ்ந்ததால் காணாமல் போன இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

நாவிதன்வெளியைச் சேர்ந்த அசோக் (வயது-48) என்பவரின் சடலம் இன்று காலை  மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அன்னமலையைச் சேர்ந்த கணேஷன் (வயது-54) என்பவரின் சடலம் நேற்று சனிக் கிழமை காலை மீட்கப்பட்டிருந்தது.

பொலிஸாரும், பொது மக்களும் இணைந்து தேடுதல் நடத்தியபோது, தோணி கவிழ்ந்த இடத்துக்கு அண்மித்த பகுதியில் இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .