Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 பெப்ரவரி 09 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
வெள்ள அனர்த்தம் காரணமாக, கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்டிருந்த பாடசாலைகள் அனைத்தும் நாளைய தினம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள சில பாடசாலைகள் இன்னும் வெள்ளம் சூழ்ந்த நிலையிலேயே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சில பாடசாலைகளில் வளாகத்தினுள் வெள்ளம் வடியாத நிலையிலுள்ள அதேவேளை, வேறு சில பாடசாலைகளில் வளாகத்தினுள்ளும் வகுப்பறைகளினுள்ளும் வெள்ளம் தேங்கியுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில், கற்றல் - கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுவது சிரமமான காரியம் என பாடசாலை சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.
வெள்ளம் முற்றாக வடியாத பாடசாலைகளில், சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும், சுத்தப்படுத்தாத நிலையிலுள்ள பாடசாலைகளில் இருந்து கொண்டு மாணவர்கள் கற்றலில் ஈடுபடும்போது அவர்கள் தொற்று நோய்களுக்குள்ளாகலாம் எனவும்; - பாடசாலை சமூகத்தினர் மேலும் கூறுகின்றனர்.
30 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
3 hours ago