2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 'பணத்திற்காக வேலை' நிகழ்ச்சித்திட்டம்

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 13 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 'பணத்திற்காக வேலை' நிகழ்ச்சித்திட்டம் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வெள்ள அனர்த்தத்தினால் அன்றாடத் தொழிலை இழந்தவர்களுக்கு வருமானத்தை பெற்றுக்கொடுத்தல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களினை சீர்செய்தல் போன்ற நோக்கங்களை கருதி இந்த வேலைத்திட்டம் அரசினால் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதில் பங்குபற்றும் ஒவ்வொரு நபருக்கும் ஒருநாளைக்கு ஐநூறு ரூபாவீதம் ஊதியம் வழங்கப்பட உள்ளதுடன் இதற்காக அவர்கள் ஒருநாளைக்கு ஆறு மணித்தியாலங்கள் பணிபுரிய வேண்டியிருக்கும்.

இவ்வேலைத்திட்டம் தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவூட்டும் நிகழ்வுகள் மாவட்ட செயலகத்திலும் பிரதேச செயலகங்களிலும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .