2025 ஜூன் 09, திங்கட்கிழமை

பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ஹக்கீம் புகார்

Super User   / 2011 மார்ச் 06 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை தான் கலந்துகொண்ட கூட்டத்திற்கு இடையூறு விளைவித்த போது பொலிஸார் பக்கச்சார்பாக நடந்து கொண்டமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இது தொடர்பாக தான் பொலிஸ் மா அதிபரிடம் பேசியதிற்கினங்க விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதாக பொலிஸ் மா அதிபர் உறுதியளித்துள்ளார் என தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு ரவூப் ஹக்கீம்  குறிப்பிட்டார்.

அமைச்சர் அதாவுல்ல மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை ஆகியோரின் தலைமையிலான குழுவினராலேயே குறித்த கூட்டம் குழப்பப்ட்டதாக ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டினார்.

இதன்போது, குழப்பம் விளைவித்தவர்களுக்கு எதிராக பொலிஸார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் அவர்களுக்கு ஆதராவாக பொலிஸார் செயற்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0

  • mam.fowz Monday, 07 March 2011 09:49 AM

    சபாஸ் சரியான போட்டி ...........?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .