2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

அக்கரைப்பற்றில் அடிகாயங்களுடன் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2011 மார்ச் 09 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருங்கொடித்தீவு பகுதியில் சற்று முன்னர் அடிகாயங்களுடன் ஆணொருவரின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் இந்த சடலம் அக்கரைப்பற்று –அம்பாறை பிரதான வீதியில் இருந்து மீட்க்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் விஜயன் (22 வயது) என்பவரது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி சடலத்தை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லுமாறும் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .