Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2011 மார்ச் 12 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
மனநிலை குன்றிய நிலையில் வீதியில் விடப்பட்டிருந்த இளைஞர் ஒருவரை பொதுமக்கள் மீட்டு மனித உரிமைகள் இல்லத்திடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
வான் ஒன்றின் மூலம் கொண்டுவரப்பட்டு விட்டதாகக் கூறப்படும் இந்த இளைஞனை அடையாளம் காண்பதற்காகவே மனித உரிமைகள் இல்லத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில பலர் கடத்தப்பட்டும் காணாமல் போயுமுள்ள நிலையில், பொத்துவில் பிரதேச பிள்ளையார் ஆலையத்தடியில் அவர்கள் கொண்டுவந்து விடப்படுவதாக தகவல்கள் பரவியுள்ளன. இதனால் அப்பகுதியை நோக்கி காணாமல் போனோரின் பெற்றோரும் உறவினர்களும் சென்றுள்ளனர்.
அப்பொழுது அங்கு மனநிலை குன்றிய நிலையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஓருவர் மாத்திரம் காணப்பட்டுள்ளார். இவ்விளைஞரை அணுகியபோது அவரால் மழலை மொழியில் அம்மா, அப்பா என்று மாத்திரமே பேச முடிந்ததாக அவ்விடத்தில் இருந்தோர் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து அவர்களால் அவ்விளைஞர் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்க முற்பட்ட போதும் அது பயனளிக்கவில்லை. இதனையடுத்தே குறித்த இளைஞன் அக்கரைப்பற்று மனித உரிமைகள் இல்லத்திடம் அடையாளம் காண்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
எனவே இந்த புகைப்படத்தில் தோற்றமளிப்பவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அக்கரைப்பற்று மனித உரிமைகள் இல்லத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago