2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

அல் குர்ஆன் மத்ரஸாக்களுக்கான பாடத்திட்டம் மும்மொழிகளில் வெளியீடு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 14 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமாசபையுடன் இணைந்து இலங்கையிலுள்ள அல் குர்ஆன் மத்ரஸாக்களுக்கான பாடத்திட்டத்தை வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இப்பாடத்திட்டம் மூன்று மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமாசபையின் உபதலைவர் எம்.ஐ.அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் எம்.எச்.நூறுல் அமீன், அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமாசபையின் செயலாளர் அன்சார் மௌலானா, கல்முனை கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஸட்.ஏ.நதீர் மௌலவி, அட்டாளைச்சேனைக் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் எம்.ஐ.நாஸீர் கனீ, முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தைச் சேர்ந்த டீ.றவுப்டீன், ஏ.சுபையிதீன், எம்.அஸ்றின், எம்.ஏ.ஹஸீன், எம்.ஐ.முனீர் ஆகியோர்களுடன் அம்பாறை மாவட்டத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட குர்ஆன் மதரஸாக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • jaliyath Monday, 14 March 2011 07:39 PM

    இப்படியே இவர்கள் அல்குரான் ,அல்ஹடீஸ் நிதலில் ஒன்றுபடுவார்கள் என்றால் மிக்க நன்று.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .