2025 ஜூன் 09, திங்கட்கிழமை

தங்கவேலாயுதபுர மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுத்திட்ட நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 14 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தங்கவேலாயுதபுரம், தாமரக்குளம், கஞ்சிகுடியாறு ஆகிய மூன்று கிராமங்களிலும் முழுமையாக மீளக்குடியேறாத நிலையில் மக்கள் தங்களது அன்றாட ஜீவனோபாயத்தை கொண்டு செல்வதில் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

இம்மக்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக கிழக்கு மாகாணசபையுடன் இணைந்து ஸ்நேக் புட்ஸ் லங்கா தனியார் நிறுவனம் நிலக்கடலை உற்பத்தி அபிவிருத்தித் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகின்றது.

இது தொடர்பான ஆரம்ப தெளிவுபடுத்தல் கூட்டம் இன்று தங்கவேலாயுதபுரம் பாடசாலையில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விளக்கமளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .